காலத்தின் வாய்க்குள்
முதல்முடிவு எதையும் காட்டாமல்
தொலைதூரத்தில் தெரியும்
உன் கண்களை கழற்றி எறி
சிலந்தியின் வாய்க்குள்
உனது விரல்கள்
காணாமல் போகும் காலங்கள்
கூடுகளில் இழைத்துக் கொண்டிருக்கும்
விரல்கள் வேண்டாம்
நத்தை நிறுத்திலான உனது பயணம்
எல்லைகள் தாண்டுவதில்லை
மலத்தை மிதித்து மிதித்தே
அழுக்கேறிப்போன கால்களால்
நிலையான சுவட்டை
உருவாக்க முடியாததால்
அதை வெட்டி வீசு
அணிந்து கொள்கிறாய்
துரோகங்களையும் அவமானங்களையும்
துணை தேடி தேடியே
சுய விலாசமிழந்தது
உன் இருப்பு
மாற்றான் முடைந்த பாயில்
உனது படுக்கை
புழுதியெங்கும் பதிந்து கிடக்கின்றன
பழைய சுவடுகள்
இதில் எங்கும் உறங்க வைத்திருக்கிறாய்
உனது பாதங்கள்
Saturday, April 17, 2010
Monday, April 5, 2010
அலைவரிசை எண் 1
அலைவரிசை எண் 1
அந்தியின் கண்ணீரத் துளிகளை
ஆவியாக்கி அருந்துகிறது
சூரியனின் பின்புறநிழல்
விரைந்து கொண்டிருக்கும்
காற்றலைகளில் ஏதாவதொரு
அலைவரிசையில் ஒளிபரப்பாகிக்
கொண்டிருக்கிறது
இழவுச் செய்தி
ஈட்டமுடியா இழப்பின்
நாண்களிலிருந்து
வழிகிறது குருதியின் இசை
துயரங்களின் வரிசைகளைத் தாங்கிய
கண்ணிழந்த கடிதமென
அசைகிறது உன் நா
காலம் குலுக்கிய உண்டியலுக்குள்
சிறிதும் பெரிதுமாய்
காலடித் தடங்கள்
விலங்கு நீர்பரப்பில்
மிதந்து கொண்டிருக்கிறது
செதில்கள் பிடுங்கப்பட்ட நிலையில்
கண்கள்
அந்தியின் கண்ணீரத் துளிகளை
ஆவியாக்கி அருந்துகிறது
சூரியனின் பின்புறநிழல்
விரைந்து கொண்டிருக்கும்
காற்றலைகளில் ஏதாவதொரு
அலைவரிசையில் ஒளிபரப்பாகிக்
கொண்டிருக்கிறது
இழவுச் செய்தி
ஈட்டமுடியா இழப்பின்
நாண்களிலிருந்து
வழிகிறது குருதியின் இசை
துயரங்களின் வரிசைகளைத் தாங்கிய
கண்ணிழந்த கடிதமென
அசைகிறது உன் நா
காலம் குலுக்கிய உண்டியலுக்குள்
சிறிதும் பெரிதுமாய்
காலடித் தடங்கள்
விலங்கு நீர்பரப்பில்
மிதந்து கொண்டிருக்கிறது
செதில்கள் பிடுங்கப்பட்ட நிலையில்
கண்கள்
Thursday, March 25, 2010
Wednesday, March 17, 2010
Monday, March 15, 2010
மரணத்தின் விளையாட்டு
மரித்த தாயின் விழிகளை
பிரித்துப் பார்த்து
கண்ணாமூச்சி ஆட்டுவதாய்
சிரிக்கும்
முலை சப்பி
சலித்த மதலை - இளையபாரதி
பிரித்துப் பார்த்து
கண்ணாமூச்சி ஆட்டுவதாய்
சிரிக்கும்
முலை சப்பி
சலித்த மதலை - இளையபாரதி
Saturday, February 27, 2010
எல்லாம் இயல்பாகவே .....
கடிகார முட்களில்
உறைகிறது காலம்
நீர் இன்றி கிடக்கிறது
குளம்
காற்று மட்டும்
அவ்வபோது நின்று
வீசுகிறது.......... உழவன்
உறைகிறது காலம்
நீர் இன்றி கிடக்கிறது
குளம்
காற்று மட்டும்
அவ்வபோது நின்று
வீசுகிறது.......... உழவன்
Subscribe to:
Posts (Atom)