காலத்தின் வாய்க்குள்
முதல்முடிவு எதையும் காட்டாமல்
தொலைதூரத்தில் தெரியும்
உன் கண்களை கழற்றி எறி
சிலந்தியின் வாய்க்குள்
உனது விரல்கள்
காணாமல் போகும் காலங்கள்
கூடுகளில் இழைத்துக் கொண்டிருக்கும்
விரல்கள் வேண்டாம்
நத்தை நிறுத்திலான உனது பயணம்
எல்லைகள் தாண்டுவதில்லை
மலத்தை மிதித்து மிதித்தே
அழுக்கேறிப்போன கால்களால்
நிலையான சுவட்டை
உருவாக்க முடியாததால்
அதை வெட்டி வீசு
அணிந்து கொள்கிறாய்
துரோகங்களையும் அவமானங்களையும்
துணை தேடி தேடியே
சுய விலாசமிழந்தது
உன் இருப்பு
மாற்றான் முடைந்த பாயில்
உனது படுக்கை
புழுதியெங்கும் பதிந்து கிடக்கின்றன
பழைய சுவடுகள்
இதில் எங்கும் உறங்க வைத்திருக்கிறாய்
உனது பாதங்கள்
Saturday, April 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
நண்பருக்கு வணக்கம்! கடந்த சில ஆண்டுகளாக உயிரோசை, கீற்று, யூத்விகடன், அகநாழிகை, வார்ப்பு, திண்ணை போன்ற பல இலக்கிய இதழ்களில் "உழவன்" என்ற புனைபெயரில் நான் கவிதை, சிறுகதை எழுதிக்கொண்டிருக்கிறேன். வடக்கு வாசல் ஆசிரியர் மூலம் நீங்கள் "உழவன்" என்ற பெயரை வைத்திருப்பதாக தற்சமயம் அறிந்தேன். கிட்டத்தட்ட பெரும்பாலான தமிழ் வலைப்பதிவர்களுக்கு, நான் தான் உழவன் என்று தெரியும். ஆகையால், தயைகூர்ந்து இப்பெயரை எனக்கு விட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteஅன்புடன்
உழவன்
94443 59993
tamil.uzhavan@gmail.com
www.tamiluzhavan.blogspot.com